அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

29 December 2014

தொழுகை தர்பியா 28.12.2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 28.12.2014 அன்று காலை 9.30 மணிமுதல் 12.45 வரை தொழுகை பயிற்சி தர்பியா தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது, இதில் மர்கஸ் இமாம் சகோதரர் S. அப்துல் காதர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,இதில் 20க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இன்ஷா அல்லாஹ் மாதம் தோறும் தர்பியா நடைபெறும்.


கிளை ஆலோசனை கூட்டம் - 21.12.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 21.12.2014 அன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.01.2015 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது, இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பும் தக்க ஆலோசனையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

14 December 2014

மாற்று மத தாஃவா‏

கூத்தாநல்லூர் கிளை  மர்கஸிற்க்கு 14.12.2014 அன்று கிருஸ்துவ மதத்தை சார்ந்த பெந்தகோஸ்தே பிரிவை சேர்ந்த இளையராஜா என்ற சகோதரர் கிருத்துவத்தை போதிப்பதற்காக வந்தார் 6மணியிலுருந்து மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் மற்றும் சில சகோதரர்களோடு வாதம் செய்து கொண்டேஇருந்தார், பின்பு இஷா தொழுகைக்கு பிறகும் வாதவிவாதங்கள் மர்கஸ் அலுவலகத்தில் நடந்தன,நாம் கேட்ட கேள்விகளுக்கு எதற்குமே பதில் சொல்லமுடியாமல் அடுத்தமுறை இஸ்லாத்தில் இருந்து கிருத்துவத்துக்கு வந்தவரை கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார், 

*அவருக்கு குர்ஆன் தமிழாக்கம், இயேசு இறைமகனா, பைபிளிள் நபிகள்நாயகம், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை மற்றும் நபிகள் நாயகம் பல திருமனங்கள் செய்தது ஏன் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


07 December 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 2015 காலண்டர் விற்பனைக்கு


வாராந்திர தெருமுனை பிரச்சாரம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 07.12.2014 அன்று வாராந்திர தெருமுனை பிரச்சாரம் நூரியா தெருவில்  நடைபெற்றது, இதில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


வாராந்திர பேச்சாளர் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.12.2014 அன்று வாராந்திர பேச்சாளர் பயிற்சி முகாம் மர்கஸில் நடைபெற்றது, இது மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் பயிற்சி அளித்தார்கள்.

01 December 2014

பொதுக்கூட்டத்திற்கு வாகன ஏற்பாடு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 30.11.14 அன்று மதுக்கூரில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய பொதுக்கூட்டத்திற்காக சகோதரர்களுக்காக வாகனம் ஏற்பாடு செயயப்பட்டது.

பேச்சாளர் பயிற்சி முகாம்.‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக பேச்சாளர் பயிற்சி முகாம் 29.11.2014 அன்று முதல் வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அஸருக்கு பின் தொடரந்து நடத்துகிறோம்.