அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

30 November 2013

கிராமிய தாவா 30/11/2013

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கிராமிய தாவா கீழ் பனங்காட்டாங்குடியில் கடந்த 30.11.2013 அன்று நடைபெற்றது, இதில் 9 பேருக்கு தாவா செய்யப்பட்டு 14  புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.











29 November 2013

வெளி மாவட்டம் மர்கஸ் கட்டுமான வசூல்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக திருப்பூர் மாவட்டம் மங்களம் கோல்டன் டவர் கிளை மர்கஸ் கட்டுமானத்திற்கான ஜீம்ஆ வசூல்கடந்த 29/11/13 வெள்ளிக்கிழமை ஜீம்ஆவில் அறிவிப்பு செய்யப்பட்டு ரூபாய் 6,470/= தொழுகையாளிகளிடமிருந்து இருந்து வசூல் செய்யப்பட்டுமங்களம் கோல்டன் டவர் கிளைக்கு ஒப்படைக்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

அன்னாகாலனியில் தெருமுனை கூட்டம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கூத்தாநல்லூர் அன்னாகாலனியில்   கடந்த 28/11/2013 அன்றுமஃரிபுக்கு பிறகு தெருமுனை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் சிறப்புரையாக சகோதரர் அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள் மரணம் கற்றுத் தரும் பாடம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், கிளை துனை தலைவர்நெய்னா முஹம்மது ஜனவரி 28ல் நடைபெறும் போராட்டம் ஏன் என்ற தலைப்பில் உரையாற்றி அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சிறுது நேரம் உரையாற்றினார், 50 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்த கூட்டத்தில் ஆர்வமுடன் கேட்டனர், அல்ஹம்துலில்லாஹ்.







மாற்று மத தனி நபர் தாவா - 27/11/2013

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 27/11/2013 அன்று 4 மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம்  குறித்து தாவா செய்யப்பட்டது. 4 நபர்களுக்கும் 5 புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.



மாற்று மத தாவா-திருக்குர்ஆன் அன்பளிப்பு - 27/11/2013

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 27.11.2013 அன்று திருச்சி வக்கீல் மாற்றி மத சகோதரர் குழஞ்சி நாதன் அவர்களுக்கு துனை தலைவர் நைனாமுஹம்மது திருக்குர்ஆன் அன்பளிப்பாக கொடுத்து தாவா செய்தார், அல்ஹம்துலில்லாஹ்.


26 November 2013

மாற்று மத புக்ஸ்டால் - 26/11/2013

இன்று நமது கிளை சார்பாக மாற்று மத புக்ஸ்டால் காவல்நிலையம் எதிர்புறம் அஸருக்கு பிறகு அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடந்தது, மாற்று மத சகோதர,சகோதரிகள் ஆர்வமாக கலந்துகொண்டு இலவசமாக புத்தகத்தை வாங்கி சென்றனர்,49 புத்தகங்களும், நோட்டீஸ் 100க்கு மேல் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. பூதமங்களம் கிளையில் இருந்து மெகா போன் பெறப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.










மர்கஸில் ஆஷீரா நோன்பு திறப்பு

ஆஷீரா நோன்பு திறப்பதற்கு நமது மர்கஸில் 2 நாட்களுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டு பல சகோதரர்கள் கலந்துகொன்டனர்



ஆஷீரா நோன்பு

ஆஷூரா நோன்பை பற்றிய விழிப்புனர்வு நோட்டீஸ் 500 நமது கிளை சார்பாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.



மதரஸா மாணவர்களுக்கும் பரிசு

நமது கிளையின் மூலம் நடத்தும் 2 மதராஸவின் (ரஹ்மானியா தெருவில் இயங்கும் மதரஸா ரய்யான், மர்கஸில் நடக்கும் மதரஸா தவ்ஹீ்த்) மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டன.







பரிசளிப்பு போட்டியில் கொடுக்கப்பட்ட முதல் மூன்று பரிசு சான்றிதழ்




13 November 2013

மார்க்க கேள்வி பதில் போட்டியின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு


மார்க்க கேள்வி பதில் சம்மந்தமான சில நினைவூட்டல்

முதலாவதாக இந்த கேள்வி பதில் போட்டியை நடத்தவேண்டும் என்று முனைப்பு காட்டிய நமது கிளை தலைவர் சகோதரர் K.A.அப்துல் நஸீர் அஹமது, பின்பு முழு ஒத்துழைப்பு கொடுத்த நமதுசகோ. R. நஸீர் அஹமது இந்த கேள்விகளை தயார் செய்த சகோ. பாஷித் பரீத் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல செயலாளர் சகோ. கூத்தாநல்லூர் ஜின்னா இந்த கேள்வித்தாள் தமது கடைகளிள் வைத்து எந்த பிரதிபலனும் பாராமல் விற்று கொடுத்த நமது சகோதரர்கள் பின்பு பதில்களை திருத்திய 10 சகோதரர்களுக்கும் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக என்று பிரார்திப்போம்.

ரமலானில் நடந்த மார்க்க கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்ச - 10/11/2013

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேருதவியால் கூத்தாநல்லூர் கிளை சார்பாக பரிசளிப்பு நிகழ்ச்சி அழகான முறையில் நடந்தேறியது, நல்ல தலைப்பில் அருமையாக உரையாற்றினார் சகோதரர் அப்துல் ஹமீது மஹ்ளரி, வீடியோ எடுக்காமல் விட்டது தப்பாகிவிட்டது, அருமையான உரை, அல்ஹம்துலில்லாஹ்.
முக்கிய துளிகள்
* அனைவருக்கும் பரிசு
* இரண்டு புத்தகங்கள் அனைவருக்கும் - இஸ்லாமிய கொள்கை, கொள்கை விளக்கம் - சகோ. பிஜே எழதியது
*சுற்றுவட்டார கிளை நிர்வாகிகள் எல்லோரும் கலந்துகொன்டார்கள்
*ரஹ்மானியா தெருவில் இருக்கும் நமது மதரஸா ரய்யான் மற்று நமது மர்கஸில் இருக்கும் மதரஸா தவ்ஹீத் மாணவ மாணவியர்களுக்கும் பரிசு மற்றும் புத்தகங்கள்
*குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடித்திருப்பது.
*100 சேர் பற்றாமல் இன்னும் சில சேர் வாடகைக்கு எடுத்தது மற்றும் நமது மர்கஸில் இருக்கும் பெஞ்சையும் உபயோகம் செய்தது.
*முதல் பரிசை சகோ. ஹசன் அலி அவர்களும் மாவட்ட தலைவர் H.பீர் முஹம்மது இருவரும் சேர்நது வழங்கினர்
*இரண்டாம் பரிசை சகோ. சாகுல் ஹமீது வழங்கினார்கள்
*மூன்றாம் பரிசை குவைத் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சகோ. சித்தீக் வழங்கினார்.
*நமது கிளை சகோதரர்கள் மற்றும் சுற்றுவட்டார கிளை நிர்வாகிகள் அனைவரும் பரிசு வழங்கினார்கள்.
*கடைசியாக குறை என்பது இருக்கத்தான் செய்யும், இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை வரப்போகும் குறைகளை நிவர்த்திசெய்வோம், அடுத்த முறை புதிதாக தவறுசெய்வோம், நாமும் மனிதர்கள்தானே.
ஜஷாக்கல்லாஹூ கைரன்










06 November 2013

மார்க்கவிளக்கம் மற்றும் மார்க்க அறிவு போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி


ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல தடை - கூத்தாநல்லூரில் போராட்டம் கைது - 05/11/2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்....,
அஸ்ஸலாமு அலைக்கும்

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 2 வது அலுவலக கட்டுமான பணியை தடை செய்த திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05/11/2013 அன்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு  நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது, அதை தொடரந்ந்து நமது கூத்தாநல்லூர் கிளை சாரபாக மக்களை திரட்டி போராட்டத்திற்கு செல்ல தயாராக இருந்தபோது லெட்சுமாங்குடியில் அதிகமான காவலர்கள் நாம் போராட்டத்திற்கு போவதை தடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக நமது கிளை நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததும், உடனே மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்று கேட்டறிந்து இது நமக்கும் மட்டும் அல்ல அனைத்து ஊர்களிலும் காவல்துறை இந்த போராட்டத்திற்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர் என்று செய்தி நமக்கு கிடைத்தது, நமது சுற்றுவட்டார கிளைகளான மரக்கடை,பூதமங்களம்,தண்ணீர்குன்னம், பொதக்குடி, அத்திக்கடை மற்றும் மன்னார்குடியிலுந்து கொள்கை சகோதரர்கள் அனைவரும் வாகனத்தில் கூத்தாநல்லூர் மர்கஸில் குழுமினர், பின்பு அனைவரும் மர்கஸ் வளாகத்தில் மசூரா செய்துவிட்டு வரிசையாக அணிஅணியாக சென்று லெட்சுமாங்குடி மெயின் ரோட்டில் கைதானார்கள், பின்பு அவர்களை நாகூரார் திருமன மண்டபத்தில் வைக்கப்பட்டு மதியம் 3.30மணிக்கு விடுவிக்கப்பட்டனர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துகொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்.