அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

27 May 2013

25-5-2013 காலை 11 மணிக்கு கேப்டன் நியுஸ் டிவியில் பி.ஜே அவர்களின் சிறப்பு பேட்டி



கேப்டன் நியுஸ் டிவியில் பி.ஜே யின் சிறப்பு பேட்டி by abdulnaseerkw

26 May 2013

பித்அத்தான திருமனத்திற்கு போகலாமா?கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளாள் 25/05/2013 அன்று நமது கிளை சார்பாக திருமண சம்பந்தமாக கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள், இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.நிகழ்ச்சி மாலை சரியாக 5.15க்கு  ஆரம்பிக்கப்பட்டு (மஹ்ரிப் தொழுகைக்கான இடைவெளி கொடுக்கப்பட்டு)  8.30 மணிக்கு முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.



25 May 2013

திருமணத்திற்கு போகலாமா?கேள்வி பதில் நிகழ்ச்சி

திருமணத்திற்கு போகலாமா மற்றும் திருமண சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் இன்ஷா அல்லாஹ் இன்று (25.02.13 - சனிக்கிழமை) மாலை சரியாக 5.00 மணிக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் பதில் அளிக்க உள்ளார்கள், அனைத்து சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் நகரம்

18 May 2013

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளாள் கோடைக்கால பயிற்சி முகாம் 06/05/2013 முதல் 16/05/2013 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை மர்கஸில் சிறப்பாக நடந்து முடிந்தது, இறுதிநாளான 16/05/2013 அன்று மாணவ மாணவிகளுக்கு தேர்வு வைக்கப்பட்டு முதல் 10 இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கும், விடுமுறை எடுக்காமல் வருகை தரும் மாணவ மாணவிகளுக்கும் பரிசளிப்பதற்காக இன்று 18/05/2013 பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது, அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சென்றனர், 10 நாட்கள் பாடம் எடுத்த தாயிக்கள் உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
































17 May 2013

அலர்ஜி,ஆஸ்துமா இலவச விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளையில் இன்ஷா அல்லாஹ் வருகிற 20.05.13 அன்று காலை 9.00 முதல் மதியம் 1.30 மனிவரை 





கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா


இன்ஷா அல்லாஹ் எதி்ர்வரும் 18.05.2013 (சனிக்கிழமை) அன்று மாலை சரியாக 4.30 மணிக்கு நமது தவ்ஹீத் மர்கஸில் 16.05.13 அன்று நடந்த கோடைக்கால பயிற்சி முகாமின் கடைசிநாள் தேர்வில் வெற்றிப்பெற்ற முதல் 10 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும், விடுமுறை எடுக்காமல் 10 நாட்களும் வந்திருந்த மானவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, அந்த நிகழ்ச்சியில் 10 நாட்கள் பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு என்னென்ன சொல்லிக்கொடுக்கப்பட்டது அவர்களுடைய மார்க்க சிந்தனை, பொது அறிவு சிந்தனை எந்த அளவில் இருக்கிறது என்பதை விளக்கஉள்ளார்கள், அது சமயம் அனைத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அவசியம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுமாரு அழைக்கிறோம்.

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் - கடைசி நாள் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...                                                                                                                 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை
கோடைக்கால பயிற்சி முகாம்
கேள்வித்தாள்
நாள் 16/05/2013
Marks 20X2 = 40
1-  அல்லாஹ்வை எப்பொழுது பார்க்கமுடியும்?
2-  அல்லாஹ்விற்க்கு உருவம் உண்டா ? 
3-  ஒழுக்கம் என்றால் என்ன?
4-  எந்த விசயத்தில் பெற்றோர்களுக்கு கட்டுபடக்கூடாது?
5-  எந்த கூட்டத்தினர் நரகின் அடிப்பகுதியில் இருப்பார்கள்?
6-  ருகூவு செய்யும்போழுது நம் பார்வை எங்கு இருக்கவேண்டும்?
7-  ஈமான் என்றால் என்ன?
8- நேர்ச்சை யாருக்கு செய்ய வேண்டும்? அல்லாஹ்விற்கா? அல்லது அல்லாஹ் அல்லாதவர்களுக்கா? ஆதாரத்துடன் பதில் தரவும்
9- பிரார்த்தனை யாரிடம் செய்ய வேண்டும்? அல்லாஹ்விடமா? அல்லது     அவுலியாக்களிடமா ?ஆதாரத்துடன் பதில் தரவும்
10-  உயிரைக் கைப்பற்றுபவரை குர்ஆன் என்ன பெயர் கொண்டு அழைக்கிறது?
11- நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சாபம் யார்மீது இறங்கட்டும் என்று      இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தர்கள்?
12-    உளுவின் சிறப்புகள் எத்தனை அவைகள் என்ன என்ன?
13- எந்த எந்த உறுப்புகளில் இருந்து மற்றவர்கள் நிம்மதி அடைந்தால் நாம் முஸ்லிம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள
14-நபிமார்களை இறைவன் தேர்வு செய்து அனுப்பிய நோக்கம் என்ன? ஆதாரத்துடன் பதில் தரவும்
15-பெற்றோர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று இறைவன்      கூறுகிறான் ஆதரத்துடன் பதில் தரவும்
16-       ஜம்உ கசர் என்றால் என்ன?
17-       இனைவைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா?
 18-       தொழுவதல் ஏற்படும் நன்மைகள் என்ன ?
 19-       எந்த விசயத்தை தொழுகை பாதுகாக்கிறது?
 20-       ஏன் கோடைக்கால பயிற்சி நடத்தினோம்?
Computer question
Marks 5 X 2 = 10
1.Give a Full form of "COMPUTER"?

2.What's Different Between Install and uninstall software?

3.What's Software?

4.What are the Output devices?

5.Who's the owner of Microsoft?


முக்கிய குறிப்பு 
      இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.05.2013 (சனிக்கிழமை) அன்று மாலை சரியாக 4.30 மணிக்கு இந்த தேர்வில் முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி தவ்ஹீத் மர்கஸில் நடைபெறும், அனைத்து மானவ மாணவிகளும் தமது பெற்றோர்களுடன் தவறாது கலந்துகொள்ளவும், மாணவ மாணவிகள் முதல் 10 இடத்தில் வந்திருந்தாலும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டால் தான் அவருக்கு பரிசு கிடைக்கும் வரதவறினால் அடுத்த இடம்  பிடித்த மாணவர்களுக்கு பரிசு மாற்றிக் கொடுக்கப்படும்.








13 May 2013

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை மர்கஸில் நேற்று 12/05/2013 நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே



10 May 2013

கோடைக்கால பயிற்சி முகாம் 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம் 06-05-2013 முதல் 16-05-2013 வரை நடந்து கொண்டு இருக்கிறது, சுமார் 98 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைகின்றனர்

கீழே உள்ள புகைப்படம் முதல் நாள் எடுத்தது








என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

அஸ்ஸலாமு அலைக்கும்

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? -10th, 12th மற்றும் UG மாணவர்களுக்கான மேற்படிப்பு ஆலோசனை நிகழ்ச்சி 

நாள் :- 12.05.2013 (ஞாயிற்றுக்கிழமை) - 
இடம் :- தவ்ஹீத் மர்கஸ்,
 நேரம் :- காலை சரியாக 09.30 மணி அளவில்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை