அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 December 2015

தெருமுனை கூட்டம் கமாலியா தெரு 29.12.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29.12.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் கமாலியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால் மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல்  காதர் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக  மாநில பேச்சாளர் சகோ. ஜமால் உஸ்மானி அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

தெருமுனை கூட்டம் ஜாவியா தெரு 28.11.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 28.11.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் ஜாவியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால்  இரண்டாவது முறையாக ஊர் உள்ளே ஸ்டேஜ் அமைத்து மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல் மாலிக்அவர்கள் இனைவைப்பும் அதனால் ஏற்படும் விபரீதங்களும் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக  மாநில பேச்சாளர் சகோ. தாவூது கைசர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.



14 November 2015

பெண்கள் பயான்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 08.11.2015 அன்று இஸ்மாயில் தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்



தெருமுனை பிரச்சாரம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 07.11.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் ஜின்னா தெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.



06 November 2015

தெருமுனை கூட்டம் 31.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 31.10.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் ரஹ்மானியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால்  முதல் முறையாக ஊர் உள்ளே ஸ்டேஜ் அமைத்து மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. மரக்கடை அப்துல் மாலிக் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக மர்கஸ் இமாம் மற்றும் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல் காதர் அவர்கள் இனைவைப்பும் அதனால் ஏற்படும் விபரீதங்களும் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.
பேச்சின் நடுவே கடும் மழை பெய்தது மழையை பொருட்படுத்தாமல் உரையாற்ற மக்கள் அக்கம்பக்க வீடுகளின் போர்டிகோவில் இருந்து உரையை கேட்டனர். மழை விடாததால் இறுதிநேரத்தில் பயான் நிறுத்தப்பட்டது.




30 October 2015

ஆஷீரா நோன்பு திறப்பு 23 மற்றும் 24.10.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஆஷீரா நோன்பு பிறை 9 மற்றும் 10 அன்று மர்கஸில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல சகோதரர்கள் கலந்துகொண்டனர், நோன்பு கஞ்சி வீட்டிற்கும் எடுத்துசென்றனர்.



ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகள்








19 October 2015

பெண்கள் பயான் 18.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்
கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 18.10.2015 அன்று மாலை 5.00 மணிக்கு கிளை துணை தலைவர் வீட்டில் (நேருஜி ரோட்டில்) நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார். இணைவைப்பு என்ற தலைப்பிலும் மற்றும் கடைசியாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாகவும் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.


15 October 2015

ஏழைகளுக்கு குர்பானி கறி வழங்கப்பட்டது 24.09.15 மற்றும் 25.09.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.09.2015 மற்றும் 25.09.2015 அன்று 15 மாடுகள் அறுக்கப்பட்டு பங்குதாரர்களுக்கு கறி வழங்கியது போக 160 ஏழை குடும்பங்களுக்கு 1 கிலோ கறி வீதம் வழங்கப்பட்டது.

புகைப்படம் எடுக்கவில்லை

தாமதமாக பதிவிடுவதற்கு வருந்துகிறோம்.

மருத்துவ உதவி 13.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

PACEMAKER (செயற்கை இதய மின்னூக்கி) பொருத்தப்பட்டுள்ள ஏழை சகோதரருக்கு மேல் சிகிச்சைக்காக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது.

குறிப்பு : குர்பானி தோல் விற்ற வகையில் வந்த தொகை மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது.

உதவிகள் கொடுக்கப்படும்போது புகைப்படம் எடுக்கவேண்டாம் என்ற மாநில தலைமையில் அறிவுரையின் அடிப்படையில் போட்டா எடுப்பதை தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

தெருமுனை பிரச்சாரம் 12.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

தெருமுனை பிரச்சாரம் 12.10.2015 ரஹ்மானியா தெருவில் நடைபெற்றது. சகோ. அப்துல் காதர் அவர்கள் உரைாற்றினார்கள்.



பெண்கள் பயான் 11.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்
கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 11.10.2015 அன்று மாலை 5.00 மணிக்கு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.


தெருமுனை பிரச்சாரம் 3 இடம் 10.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

தெருமுனை பிரச்சாரம் 10.10.2015 அன்று 3 இடத்தில் நடைபெற்றது. சகோ. அப்துல் காதர் அவர்கள் உரைாற்றினார்கள்

1. முதல் பெரிய தெரு (புகைப்படம் எடுக்கவில்லை)
2. இரண்டாம் பெரிய தெரு
3. நூரியா தெரு



கூத்தாநல்லூர் பெருநாள் தொழுகை தினபூமி பத்திரிக்கை செய்தி



28 September 2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெருநாள் தொழுகை‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.09.2015 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் தொழுகை அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடைபெற்றது, இதில் நூற்றுக்கனக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர், இதில் சகோ. A. சாகுல் ஹமீத் தொழுகை வைத்தார்கள் மர்கஸின் இமாம் சகோதரர் S. அப்துல் காதர் அவர்கள் இப்ரஹீம் நபியின் தியாகத்தை பற்றி உரை நிகழ்த்தினார்கள்.


தெருமுனை பிரச்சாரம் 12.09.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 12.09.2015 அன்று இஸ்மாயில் தெருவில் எது சரியான வழி என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் சகோ. மன்னை ஹாஜா மைதீன் உரையாற்றினார்.

பெண்கள் பயான் 05.09.2015

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 5/9/2015 அன்று நேருஜிரோட்டில்  நடந்த பெண்கள் பயான். உரை. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர். தலைப்பு: இதுதான் இஸ்லாம். சுமார் 40 சகோதரிகள் கலந்துகொண்டனர்.


பெண்கள் பயான் 21.08.2015

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 21.08.2015 அன்று ஷவ்கத் அலி தெருவில் நடந்த பெண்கள் பயானில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் பித் அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

18 July 2015

பெருநாள் தொழுகை - கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 18.07.2015 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது, பெருநாள் தொழுகை சகோ. சாகுல் ஹமீது அவர்கள் நடத்தினார்கள் பெருநாள் உரை மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். 
திடலில் இடம் இல்லாமல் பெண்கள் பள்ளிக்கு உள்ளேயும் ஆண்கள் தெருவில் நின்றும் தொழுதனர் . அல்ஹம்துலில்லாஹ்.







பித்ரா வினியோகம் - கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 17.07.2015 அன்று ஏழை எளிய மக்கள் 500 குடும்பத்திற்கு ரூபாய் 300 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.


06 June 2015

மருத்துவ உதவி - 06.06.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.06.2015 அன்று சிறுவனின் கை அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.



17 May 2015

மருத்துவ முகாமில் திருக்குர்ஆன் அன்பளிப்பு - 17.05.2015‏

கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இனைந்து 17.05.2015 ஞாயிறு அன்று  இலவசமாக மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது, இந்த முகாமில் கலந்துகொண்ட டாக்டர்கள், உதவியாளர்கள், நர்ஸ் மற்றும் கலந்துகொண்ட மாற்று மத சகோதரர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் 40 மற்றும் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ? என்ற புத்தகம் 40 இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.









மருத்துவ முகாம் - 17.05.2015‏

கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இனைந்து 17.05.2015 ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை இலவசமாக மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் தவ்ஹீத் மர்கஸில் அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்பாக நடந்து முடிந்தது. , சர்க்கரை, இரத்த அழுத்தம், இ.சி.ஜி, எக்கோ, எலும்பு அடர்த்தி போன்ற  பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டு  இதில் இருதயம் , மூட்டு மற்றும் எலும்பு சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள், 140 க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.






12 May 2015

வட்டி இல்லா கடன்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 11.05.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 10,000/- கொடுக்கப்பட்டது.



08 May 2015

கோடைகால பயிற்சி முகாம்‏

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 02.05.2015 முதல் 11.05.2015 வரை கோடைக்கால பயிற்சி முகாம் கிளை மர்கஸில் நடைபெற்று வருகிறது, இதில் 78 மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர்.அல்ஹம்துலில்லாஹ்


மாபெரும் மருத்துவ சிறப்பு முகாம் - கூத்தாநல்லூரில்‏


06 May 2015

புத்தக அன்பளிப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.05.15 அன்று மாற்று மத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


பெண்கள் பயான் 04.05.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 04.05.15 அன்று அக்கரை புது தெருவில் உள்ள ஒரு கொள்கை சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்.