அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

23 October 2016

பெண்கள் பயான் 23/10/2016

பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று 23/10/2016 பெண்கள் பயான் அதங்குடியில் இருக்கும் சகோதரர் நூருல் அமீன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சகோதரி ஃபர்ஹானா மற்றும் சகோதரி நபிஸா உரையாற்றினார்கள், சுமார் 35 சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை

தெருமுனை பிரச்சாரம் கமாலியா தெரு 16/10/2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக கமாலியா தெருவில் தெருமுனை பிரச்சாரம்



ஆஷீரா நோன்பு கஞ்சி வினியோகம் மற்றும் மர்கஸில்நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு 11 மற்றும் 12/10/2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக ஆஷீரா முதல் மற்றும் இரண்டாம் நோன்புக்கு பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம்  செய்யப்பட்டது
அதே போல  இரண்டு நோன்பும் மர்கஸில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு  சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

முதல் நாள் நோன்பு






இரண்டாம் நாள் நோன்பு






தெருமுனை பிரச்சாரம் 09/10/2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக ஜன்னத் நகரில் தெருமுனை பிரச்சாரம்


14 September 2016

பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 13.09.2016 காலை 7.45 மணிக்கு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக நடந்தது, சகோதர சகோதரிகள் திரளாக இந்த நபி வழி சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஜஷாக்கல்லாஹீ கைரன்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை

16 August 2016

பெண்கள் பயான் 14.08.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சகோதரர் மர்கஸின் இமாம் அப்துல் காதர்  அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 35 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் சகோதரர் அப்துல் மாலிக் (மரக்கடை) அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

புகைப்படம் எடுக்கப்படவில்லை

தெருமுனை கூட்டம் 06.08.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக தெருமுனை கூட்டம் முதல் ரஹ்மானியா தெருவில் இன்று 06.08.16 சனிக்கிழமை 7மணி அளவில் அல்லாஹ்வின் அருளாள் சிறப்பாக நடந்தது, முதல் உரையாக மர்கஸ் இமாம் அப்துல் காதர் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் சகோ. கமால் misc அவர்களும் சிறப்பாக உரையாறாறினார்கள், ஆண்களும்பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்,
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை



07 July 2016

பெருநாள் தொழுகை 06.07.2016

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.07.2016 புதன் கிழமை பெருநாள் தொழுகை தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது, இதில் 500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகை சகோ. சாகுல் ஹமீத் தொழுவித்தார்கள் பெருநாள் உரை மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அல்லாஹ்வை போற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.









பித்ரா பொருள் வினியோகம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.07.2016 செவ்வாய் கிழமை பித்ரு பொருட்கள் 540 குடும்பங்களுக்கு 350 ரூபாய் பொருட்கள் வழங்கப்பட்டது.





03 July 2016

பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

தொழுகை நேரம் : காலை சரியாக 7.45

இடம் : தவ்ஹீத் மர்கஸ் வளாகம்

தொழுகை : சகோதரர் சாகுல் ஹமீத்

உரை : மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்.

சகோதர சகோதரிகள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை
திருவாரூர் மாவட்டம்.

ரமலான் கடைசி 10 ல் சஹர் உணவு ஏற்பாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ரமலான் கடைசி 10 ல் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நாளாக சுமார் 150 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.


08 June 2016

முதல் நாள் இஃப்தார்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக முதல் நாளின் இஃப்தார் திறப்பு


நோன்பு கஞ்சி வினியோகம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக நோன்பு கஞ்சி வினியோகம்






கூத்தாநல்லூர் கிளை சார்பாக தொடர் பயான்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்றுமுதல் 30 நாட்கள் வரை இரவுதொழுகை முடிந்தவுடன் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் தொடர் பயானாக மர்கஸ் இமாம் சகோதரர் அப்துல் காதர் 20~25 நிமிடம் உரையாற்றுவார்.



கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸின் முதல் நாள் இரவு தொழுகை




தீயகுணங்களும் தீர்க்கும் வழிகளும் பாலிமர் டிவியில்


06 June 2016

ரமலான் 2016 கேள்வி பதில் போட்டி வினாத்தாள் அச்சாகிக்கொண்டிருக்கின்றது


கிளை பேச்சு பயிற்சி 04.06.2016

பேச்சாளர்களாக உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் இன்று 04.06.2016 இஷாவுக்கு பிறகு 5 நிமிடம் சகோதரர பர்தீன் கான்  சிறப்பான முறையில் உரையாற்றினார்


கிளை பயிற்சி 05.06.2016

மாணவர்களை பேச்சாளர்களாக உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் இன்று 05.06.2016 இஷாவுக்கு பிறகு 5 நிமிடம் மாணவர் அஃப்ரார் தீயகுணங்கள் பற்றி சிறப்பான முறையில் உரையாற்றினார்.

பெண்கள் பயான் 05.06.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சகோதரர் ஜமால் நிஜாம் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 40க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் சகோதரி ஃபர்ஹானா அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.



ரமலான் மாதம் நமது மர்கஸின் நிகழ்ச்சி நிரல்


ரமலான் கஞ்சி மற்றும் இஃப்தார் பொறுப்பாளர்கள்


30 May 2016

பெண்கள் பயான் 28.05.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 28.05.2016 சனிக்கிழமை அன்று சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் மர்கஸ் இமாம் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் பெண்களுக்கு முன் மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

கிளை பொதுக்குழு 2ம் ஆண்டு 29.05.2016

அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 29.05.2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் 2ம் ஆண்டு பொதுக்குழு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது,
இந்த பொதுக்குழுவை திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்,
மர்கஸ் இமாம் S. அப்துல் காதர் சபை ஒழுங்குகள் பற்றி உரையாற்றினார்.
கிளை தலைவர் A. நெய்னா முஹம்மது தொகுத்து வழங்கினார்.
கிளை செயலாளர் A. முஹம்மது (அபுபஜ்லான்) ஆண்டறிக்கை வாசித்தார்.
கிளை துணை செயலாளர் V.M. முஹம்மது காசிம் 2015ம் ஆண்டு வரவு செலவு கணக்கை வாசித்தார், இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் நோண்பு முதல் நாள் வரை பொ1ருளாளரை சந்தித்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறலாம் என்று உறுப்பினர்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டது.
குறைகள் விமர்சனம் இருந்தால் வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டு கிளை தலைவர் உரிய முறையில் விளக்கம் அளித்தார்.
புதிய கிளையாக கிளை 3 என்று பிரிக்கப்பட்டு தலைவராக ; K.A. அப்துல் நசீர். செயலாளராக ; S.H.நூர் முஹம்மது  பொருளாளராக : திப்பு ரஹீம் துணை தலைவராக : V.M.S. சாகுல் ஹமீது துணை செயலாளராக : S.M.K. ஜஃப்ரான் நியமிக்கப்பட்டார்கள்.
கூத்தாநல்லூர் கிளை 3 க்கு ஜமாலியா தெரு, 2வது கமாலியா தெரு, இஸ்மாயில் தெரு, ஜாவியா தெரு மற்றும் ஹமீதியா தெரு ஆகிய 5 தெருக்கள் இந்த கிளையின் கீழ் வரும் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது,
செயலாளர் நன்றியுரையுடன் பொதுக்குழு சிறப்பாக முடிந்த்து, புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை 1
   




23 May 2016

ரமளான் 2015 கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி

கூத்தாநல்லூர் கிளை சார்பாக ரமளான்  2015 கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டு 22.05.2016 அன்று ரஹ்மானியா தெருவில் தெருமுனை கூட்டத்தோடு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதல் பரிசாக DOUBLE DOOR FRIDGE இரண்டாவது பரிசாக WASHING MACHINE மூன்றாவது பரிசாக STEEL BEROL  மற்றும் 10 ஆறுதல் பரிசாக ரூபாய் 1000 கொடுக்கப்பட்டது எழுதியவர்கள் அனைவருக்கு அவ்ரகள் எடுத்த மதிப்பெண்க்கு ஏற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.


தெருமுனை கூட்டம் 22.05.2016

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.05.2016 அன்று தெருமுனைகூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ரஹ்மானியா தெருவில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்புரையாக சகோ. சபீர் அலி அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள், கூத்தாநல்லூர் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பராஅத் இரவாக இருந்ததால் பராஅத் இரவு பித்அத்தானது என்று சிறப்பாக பேசினார்கள், இந்த கூட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.



கோடைக்கால பயிற்சி முகாம் 02.05.2016 முதல் 12.05.2016 வரை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் 02.05.2016 முதல் 12.05.2016 வரை நடைபெற்றது, இதில் 98 மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.







மோர்பந்தல் 25.04.16 முதல் 15 நாட்கள் தொடர்ந்து

கூத்தாநல்லூர் கிளை சார்பாக தாகம் தீர்க்கும் மோர் பந்தல் மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து 15 நாட்கள் கொடுக்கப்பட்டன


மாற்று மத சகோதரருக்கு குர்ஆன் அன்பளிப்பு 25.04.2016


கூத்தாநல்லூர் கிளை சார்பாக மாற்று மத சகோதரருக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் மற்று மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது






நாகங்குடி தீ விபத்து 28.03.2016


கடந்த 28.03.2016 அன்று நாகங்குடியில் இரண்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் சேதப்பட்டது செய்தி கேள்விப்பட்டு கூத்தாநல்லூர் கிளை சார்பாக உடனே மக்களிடம் வசூல் செய்யப்பட்டு இரண்டு வீட்டிற்கு தேவையான உபயோகப்பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டன,,