அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

28 December 2012

ஸஃபர் மாதமும் மூஸ்லீம்கள் நிலையும்

                  
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் நோட்டீஸ்     வினியோகம் -26-12-2012
ஸஃபர் மாதமும் மூஸ்லீம்கள் நிலையும் என்ற தலைப்பின்கீழ் இம்மாதத்தை பற்றி தவறாக விளங்கி வைத்து இருக்கும் நமது மக்களுக்குஎளிதில் புரியும் படி இம்மாதத்தை பற்றியும், காலத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறுவது என்ன என்பதை கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் நோட்டீஸாக வெளியிட்டது, இந்த நோட்டீஸை வீடு வீடாக சென்று நேரடியாக வினியோகம் செய்யப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே….
நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் திருக்குர்ஆன் 3:104




24 December 2012

பெண்கள் பயான் 23-12-2012


அல்லாஹ்வின் திருப்பெயரால் 
அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்கள் பயான் 23-12-2012
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் பயான் 23/12/2012 அஸருக்கு பின் 4.30 மணியளவில் துவங்கி 5.45 மணிக்கு நிறைவுப்பெற்றது, சகோதரிகள்,தாய்மார்கள் கலந்துகொன்டனர்.சகோதரி நபிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்…..
புகழ் அனைத்தும் இறைவனுக்கே….

21 December 2012

23/12/2012 அன்று இன்ஷா அல்லாஹ் பெண்கள் பயான்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
இன்ஷாஅல்லாஹ்…………. வருகின்ற 23.12.2012 ஞாயிறு கிழமை மாலை 4.00 மணியளவில்....
 பெண்கள் பயான்  கூத்தாநல்லூர்  தவ்ஹீத் மர்கஸில்  நடத்த உள்ளோம் தாங்களது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் & சகோதரிகள் தவறாமல் கலந்து கொள்ளவதற்க்கு குடும்பத்தினர்க்கு தகவல் கொடுத்து இந்த பயானில் தவறாது கலந்துக்கொள்ளச் சொல்லவும், வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
உரையாற்றுபவர் - சகோதரி நபிஸா ஆலிமா அவர்கள்
தலைப்பு : பெற்றோர்களை எவ்வாறு காப்பது.

மாற்றுமத தாவா -20-12-2012


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ***மாமனிதர் நபிகள் நாயகம்*** என்ற புத்தகத்தை மாற்றுமத சகோதரர்களுக்கும் கூத்தாநல்லூர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பல சகோதரர்களுக்கு நேரடியாக சென்று இப்புத்தகத்தை கொடுக்கப்பட்டது இன்ஷாஅல்லாஹ் இந்த சகோதரர்களுக்கு தூய்மையான இஸ்லாம் கிடைக்க ஏக இறைவனை பிரத்தினை செய்ய வேண்டுகிறோம்.புகழ் அனைத்து அல்லாவிற்க்கே…..



உலகம் அழியப்போகின்றதா? பிளக்ஸ் போர்டு 18/12/2012


உலகம் அழியப்போகின்றதா?
 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…….
வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதாஎன்ற கேள்விக்குறியோடுபத்திரிக்கைகளும்தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போதுமுக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்திஉலகம் அழியப்போகின்றது என்று இதற்கு முன்பாக இதுபோல ஒரு புரளியை கிளப்பினார்கள். அதுபோல இப்போது இந்தப் புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள். இப்படி உலகமே மூடநம்பிக்கையிலும்பீதியிலும் உரைந்துள்ள இவ்வேளையில் உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த புரளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு குராஆன் வசனம் ஆதாரமாகும் என்பதனை.பொது மக்கள் அறிவிதற்க்காக் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பொது இடங்களில் வைத்து உள்ள பிளக்ஸ் போர்ட்கள் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே..


மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம் 16/12/2012‏-தவ்ஹீத் மர்கஸ்


                          அல்லாஹ்வின் திருப்பெயரால்                                                               ஒருங்கினைப்பு கூட்டம் -16-12-2012
கூத்தாநல்லூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம் 16.12.2012 ஞாயிற்றுகிழமை மகரிபுக்கு பின்னர் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் பீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில்அருகில்உள்ளமரக்கடை,தண்ணீர்குன்னம்,பொதக்குடி,அத்திக்கடை,  பூதமங்கலம் ஆகிய கிளைககள் கலந்து கொண்டனர்.  இந்த ஒருங்கினைந்த கிளைகளை கொண்டு எவ்வாறு தாவா செய்ய வேண்டும் என்பதை பற்றியும், மாற்றுமத சகோதர்களிடம் தாவாவை எத்தி வைக்க எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதனை பற்றி மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள்அறிவுறுத்தினார் மேலும்  மின்கட்டணம் செலுத்துவத்ற்க்கு பொது மக்கள் பெரும் அவதிக்குள் ஆகிறார்கள் அதனை சுட்டி காட்டி பொது மக்கள்மின்கட்டணம் செலுத்துவதற்க்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்ய முன் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மருத்துவ உதவி -12.12.2012


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கூத்தாநல்லூரை சேர்ந்த சாஹீல் என்ற சகோதரரின்  மகன் அவர்களின் நீர் பிரிவு பகுதியில் பிரச்சனை இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் தான் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளார். அவரின் மகன் அறுவை சிகிச்சைக்காக ரூ7000/= இத்தொகை கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம்  வழுங்கப்பட்டது.

11 December 2012

வழிப்போக்கர்கு உதவி

வடகரையை சேர்ந்த சகோதரர் சாஹீல் ஹமீது என்பவரின் குடும்பத்தோடு கூத்தாநல்லூர் வேலை தேடி வந்தாகவும்  தனது ஊருக்கு பஸ் செல்லுவதற்க்கு  தொகையில்லமால் இருந்தார் அதனை விசாரித்து அவருக்கு வழி செலவிற்க்கு ரூ 600.00. கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்மூலம் வழுங்கப்பட்டது.

யார் இவர் நோட்டீஸ் வினியோகம்

யார் இவர் என்ற நோட்டிஸ் மாற்று மாத சகோதரர்களுக்கு பலருக்கு வினியோகம் செய்யப்பட்டது அதில் செந்தில் என்பவருக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் துனை செயலாளர் ஆர்.நசீர் அவர்கள்கொடுத்து  அதில் உள்ள விஷயங்களை பற்றி தாவா செய்தார்.