அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

17 December 2013

செயல்வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக செயல்வீரர்கள் கூட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 15-12-13 அன்று சிறப்பாக நடந்துமுடிந்தது, இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்புரை சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி ஜனவரி 28 போராட்டத்தின் முக்கியத்துவையும், அதில் அனைவரும் கலந்து கொள்ள செய்யவேண்டும் என்று உரை நிகழ்த்தினார்,மாவட்ட அனைத்து கிளை பொருப்பாளர்களும் ஜனவரி 28க்கான இதுவரை செய்த பணிக்ள் இனிமேல் செய்யகூடிய பணிகளை பற்றி விளக்கமளித்தனர்,300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்













ஜனவரி 28 ஆர்ச்

மர்கஸ் வளாகத்தில் 11- 12-13 அன்று ஜனவரி 28 போராட்டத்திற்கான ஆர்ச் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.


மருத்துவ உதவி - 13/12/13

மருத்துவ உதவி கேட்டு மனு கொடுத்த சகோதரருக்கு ரூபாய் 1000/= நமது கிளையின் சார்பாக கொடுக்கப்பட்டது.

கல்வி உதவி - 13.12.13

மாற்று மத சகோதரரின் மகளின் கல்வி உதவிக்காக ரூபாய் 3000/= நமது கிளையின் சார்பாக வழங்கப்பட்டது



08 December 2013

ஜனவரி 28 வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து அழைப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான நோட்டீஸ் மற்றும் அதற்கான விளக்கம் கொடுத்து வீடு வீடாக சென்று 600 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் இரண்டு நாட்களாக 7 மற்றும் 8/12/2013 ஆகிய தேதிகளிள் கொடுக்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட தெரு
உமர் ஒலி நகர், ஜன்னத் நகர், காமராஜர் காலனி, நேருஜி ரோடு, கீழ் வாய்க்காங்கரை, மேல் வாய்க்காங்கரை,நேருஜி ரோடு,மேலத்தெரு,சின்னப்பள்ளி தெரு, சனிக்கிழமை சந்தை, திருவள்ளுவர் நகர்.














நபி வழிமுறைப்படி ஜனாஸா நல்லடக்கம்

நமது ஏகத்துவ சகோதரர்களின் தாயார் கடந்த 04/12/2013 அன்று வபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி..... ), அந்த சகோதரர்களின் தாயாருக்கு நபிவழிமுறைபடி நல்லடக்கம் செய்யப்பட்டது.










04 December 2013

செயல்வீரர்கள் கூட்டம்

கூத்தாநல்லூர் கிளையில் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 03/12/2013 மஃரிபுக்கு பிறகு மாவட்ட தலைவர் சகோதரர் பீர் முஹம்மது தலைமையில் மர்கஸில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் ஜனவரி 28 2014 சிறை நிரப்பும் போராட்டத்தின் ஆயத்தபடுத்தும் ஆலோசனை செய்யப்பட்டது, இந்த கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு தாங்களது கருத்துக்களை ஆலோசனையாக கூறினர்,கூட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்



 















வட்டி இல்லா கடன் -45-

வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தின் கீழ் 45வது நபருக்கு ரூபாய் 10,000 கடன் கொடுக்கப்பட்டது.






01 December 2013

திருக்குர்ஆன் அன்பளிப்பு - மாற்று மத தாவா

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 01/12/2013 அன்று  மாற்று மத சகோதரர் டிரைவர் கன்னன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டு எந்த சந்தேகம் அல்லது இஸ்லாமிய புத்தகங்கள் தேவைப்பட்டால் நமது கிளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, திருக்குர்ஆனை கிளை துனை செயலாளர் சகோதரர் ஆரிப் அவர்கள் வழங்கினார்கள்



30 November 2013

கிராமிய தாவா 30/11/2013

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கிராமிய தாவா கீழ் பனங்காட்டாங்குடியில் கடந்த 30.11.2013 அன்று நடைபெற்றது, இதில் 9 பேருக்கு தாவா செய்யப்பட்டு 14  புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.